Wednesday, October 18, 2006

தற்கொலை..! - ?

இன்றைய நூற்றாண்டின் சிந்தனைவாதியான மார்ஸெல், தற்கொலை மட்டுமே பிரச்சனைக்கு வழியெனக் கூறியுள்ளார். வாழ்க்கை அருத்தமற்றது என்றாகிவிடும்போது என்ன தான் மிஞ்சி நிற்கிறது?ஏன் இதனை இழுத்துச் செல்ல வேண்டும்? ஏன் வாழ வேண்டும்?

அருத்தமற்ற இந்த வாழ்க்கையில் சக்கரம் போன்று நீ சுழன்று கொண்டுருக்கிறாய். காலையில் எழுகிறாய், வேலைக்குச் செல்கிறாய், எதோ சம்பாதிக்கிறாய், இரவு வருகிறது, படுக்கைக்குச் செல்கிறாய், கனவு காண்கிறாய், மீண்டும் காலையில் எழுகிறாய்... இவ்வாறு உன் காலச்சக்கரம் சுழல்கிறது. ஆனால் நீ எங்கும் போய் சேர்வதில்லை. கடைசியில் மரணம் வந்து உன்னை ஆட்கொள்கிறது. எனவே இதற்காக ஏன் காத்திருக்க வேண்டும்? தற்கொலை ஏன் செய்து கொள்ளல் கூடாது? இந்த அருத்தமற்ற பொருளை ஏன் அழித்துக் கொள்ளக்கூடாது? இத்தனை கவலைகளையும் இந்த அருத்தமற்ற வாழ்க்கைக்காக ஏன் சுமக்க வேண்டும்? இது வாதத்திற்குரிய ஒரு முடிவு.

[உண்மையை தேட வேண்டியதில்லை]

1 comment:

rahini said...

oh..nalla varikal sinthikka vendiya varikal

ithai padiththal unmaiyai thedavendiyathila

unmaithan.