Sunday, April 19, 2009

உயரமாய் நிற்றல், தனித்து இருத்தல்..



நீ கொண்டிருக்கிற எல்லா ஆசைகளையும், நீ கொண்டிருக்கிற எல்லா கர்வங்களையும், நீ கொண்டிருக்கிற எல்லா பிடிப்புகளையும் உதறி எழுந்து நின்றால் உயரமாகி விடுவாய். இவைகளை வைத்திருக்க சுமையால் குறுகிப் போய்த்தான் நிற்பாய்.

பொறாமை என்பது இயலாமையின் வெளிப்பாடு. இயலாமை என்பது திடசித்தம்
இல்லத நிலை. திடசித்தம் இல்லாத நிலை என்பது வைராக்கியம் அற்ற தன்மை.
வைராக்கியம் ஏன் இல்லை என்று யோசித்தால் மனவலுவும, உடல் வலுவும் குன்றியிருத்தல். ஏன் மனவலுவும, உடல் வலுவும் குன்றியிருக்கிறது என்றால்
அப்பியாசங்கள் போதமை ஏன் அப்பியாசங்கள் போதமை என்று யோசித்தால் உன்னைத் தடுக்கி விழவைக்க, அப்பியாசத்திலிருந்ஷயங்கள் இருகின்றன. ஏகாக்கிரகம் இல்லை.


ரிஷிகளும், முனிவர்களும் காட்டில் ஏன் வாழ்கிறார்கள் தெறியுமா?ஏகாக்கிரகம்
கருதியே. காட்டில் கண்களைக் கவர்ந்து இழுக்கின்ற விஷயங்கள் எதுவும் இல்லை. வெறும் பச்சை மணம், சில மிருங்கள் இவைகள் மட்டுமே இருக்கின்றன். சுற்றி வேலியிட்டு திறந்த வெளியில் குடிசைகள் போட்டு அமர்ந்துவிட்டால், வேறு எவருடைய பேச்சுக் குரலும் இல்லாமல், வேறு எவருடைய சிந்தனையும் இல்லாமல் ஒரே புள்ளியி நகர்ந்து விடலாம்.


தனியாய் இருத்தல்:

தனியாய் இருபதுதான், அத்வைதியாக இருப்பதினுடைய அற்புதமான நிலை.
தனியாக இருப்பதுதான் உண்மையாக இருப்பது. உண்மைக்கு மாறாக இருக்கின்ற பொழுதுதான் எவரையேனும் சார்ந்திருக்க வேண்டுமென்ற மயக்கம், மாயை ஏற்படுகிறது. உடம்பைப் பற்றிய சிந்தனை இருக்கும் பொழுதுதான் நான், நீ என்கிற பேதம் ஏற்படுகிறது. நான், நீ என்கிற பேதம் ஏற்படுகிற பொழுதுதான் எதிரி
என்பதும், நண்பன் என்பதும், தாய் என்பதும், தமயன் என்பதும், மனைவி என்பதும், குழந்தை என்பதும் ஏற்படுகிறது.

எல்லாம் ஒன்று என்று இருப்பவன் எவனோடும் ஒட்ட மாட்டான். எல்லாம் ஒரே விஷயத்தின் பல சிதறல்கள் என்று புரிந்தவன் தனியாக இருப்பதற்கு
அஞ்சமாட்டான்.

பரசுராமர் சரித்திரத்தில் இருந்து,
எழுத்து சித்தர் பாலகுமாரன்.