Sunday, October 21, 2007

இந்திரா பார்த்தசாரதி - 'அக்னி' யிடமிருந்து.....




"சமூகப் பொறப்பு!'... இன்னொரு வார்த்தை. 'ஜனநானயகம்'.. கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் நாதத்தில் மயங்கி, நானே என்னை ஏமாற்றிக் கொள்ளும் பருவத்தை நான் தாண்டிவிட்டேன். இதில் இரண்டு நிலைகள் உண்டு. முதலில் தன்னைத்தனே ஏமாற்றிக் கொள்வது.. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமொன்ற உணர்வு வந்த பின், இந்த வார்த்தைகளைக் கொண்டே பிறரை ஏமாற்ற ஆரம்பிப்பது இரண்டாவது நிலை.. இந்தக் காலத்து அரசியல்வாதிகள், புத்திசாலிகள். தொடங்கும் போதே இரண்டாவது நிலையில்தான் தொடங்குகிறார்கள்.

-----------
இதுதான் தமிழ்நாட்டுப் பண்பு போலிருக்கிறது. எதையும் அவநம்பிக்கையோடு அணுக ஆரம்பித்து, பிறகு மனச் சமாதானமடைந்தால் நம்பிக்கை கொள்வது.. எதையும் அவநம்பிக்கையோடு அணுக ஆரம்பித்து, பிறகு மனச்சமாதானமடைவது, நம்பிக்கையோடு அணுக ஆரம்பிப்பது, பிறகு ஏமாற்றமடைவதைக் காட்டிலும், வரவேற்கத்தக்கது.. இது ஒருவருக்கு மனோதத்துவ விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.."

---------
ஒருவன், மற்றவர்களுக்கு மனச்சாட்சித் தொந்தரவு ஏற்படும் வகையில், நல்லவனாக இருந்தால், அவனுக்குச் சிறிது அதிகாரத்தைக் கொடுத்தால் போதும், அவனை அடியோடு கெடுத்து விடுவதற்கு.

----------
அநுபாவத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒருவர் இன்னொருவனை அநுதாபத்தின் காரணமாகப் புரிந்து கொள்ள முயல்கின்றான் என்றால், தன் நியாய உணர்வை ஓரளவு சமரஸப்படுத்திக் கொள்ள முயல்கின்றான் என்றுதான் அர்த்தம்.. நியாய உணர்வு என்பது நிர்தாட்சண்யமானது.. செண்டிமெண்டுகளுக்கு இதில் இடமில்லை.."

Saturday, September 29, 2007

ஜென்னின் முக்கியத்துவம்....

ஜென்,ஓர் அதி அற்புதமான வளர்ச்சி. அதைப் போன்ற ஓர் தன்மை, எப்பொழுதாவதுதான் நடைமுறைக்கு வரும்.

புத்தர், மஹாவீரர், திலோப்பா, கோரக், கபீர் போன்றவர்கள், பல நூற்றாண்டுகளாக, எப்படி இந்தப் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து தப்புவது என்பது பற்றியே சிந்தித்துப் போதனைகளைச் செய்தார்கள். எப்படித் தன்னைத் தானே சுற்றி வருவது, தன்னுள்ளே செல்லுவது, எப்படித் எல்லா உறவுகளிலிருந்தும் முழுவதுமாக விடுபடுவது, எப்படி எதன் மேலும் பற்று இல்லாமல் இருப்பது, எப்படி வெளியை மறந்து உள்ளே செல்லுவது என்பது பற்றியே ஆராந்தார்கள். இந்த மனங்களின் சூழ்நிலைதான், ஜென் விதை இந்தியாவில் உண்டாகல் காரணமாயிற்று.

ஜென் என்றால் 'தியான்' என்று அர்த்தம். 'த்யான்' என்ற வார்த்தையே ஜப்பனிய மொழியில் 'ஜென்' என்று மருவி விட்டது. இந்திய பூர்ண விழிப்புத் தன்மையின் விளைவே 'தியானம்'. தியானம் என்றால் தனித்து, நீங்கள் உங்கள் உயிர்மைய நிலையில் இருப்பது என்பதாகும். அந்த நிலையில் எந்த ஒரு எண்ணமும் இருக்க கூடாது.

எது உங்கள் உள்மைய நிலையிலிருந்து வெளிப்படுகிறதோ, அதைப் பிறருக்கு விவரிக்க இயலாது. ஆனால், காட்ட முடியும் என்று ஜென் மக்கள் பொதுவாக சொல்லுவார்கள். அதேபோல, ஒரு சூழ்நிலையை உண்டாக்கி, அதன் அர்த்தத்தைக் குறிப்பால் உணர்த்த முடியும். ஆனால் வார்த்தைகளால் சொல்ல இயலாது. அதை ஒரு சிறு நிகழ்ச்சி வெளிப்படுத்தி விடும். ஜென் முழுக முழுக்கச் சிறு கதைகள், நிகழ்ச்சிகள், உதாரணங்கள் மூலமாகவே வளருகிறது.

குரு பொக்கூஜூவிடம், சிலர் வந்து, "நாங்கள் ஒவ்வொரு நாளும் உடை உடுத்தி கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம். இவற்றிலிருந்து எப்படி மீளுவது?" என்று கேட்கிறார்கள். பொக்கூஜூ, "நாங்கள் உடுத்துகிறோம், சாப்பிடுகிறோம்" என்று பதி சொல்லுகிறார். இந்தப் பதில் மிகவும் எளிமையானது. அதில் மிக மென்னையான் கருந்து இருக்கிறது. அதாவது, நாம் உடை உடுத்துகிறோம், சாப்பிடுகிறோம் என்றால், நம் முழுமையை அதனுடன் கலக்கிறோம். நம் எண்ணங்கள் அனைத்தும், எதைச் செய்கிறீகளோ, அதிலேயே இலயித்து இருக்க வேண்டும். அப்படி ஒருவர் சாப்பிடும் போது சாப்பிடுபவர் மறைந்து விடுகிறார். சாப்பிடுவது மட்டும் நடை பெறும். ஆகவே அதிலிருத்து எப்படி வெளிவருவது என்று இப்பொழுது யார் கேட்கிறார்கள்? உங்கள் மனம் அந்தச் செய்கையிலிருந்து பிரிந்து நிற்கும்பொழுது, அந்த மனம்தான் இந்த்க் கேள்வியை எழுப்புகிறது.

- ஓஷோ

Monday, February 26, 2007

தனித்து நி்ற்கும் துணிவு

அனுபவமில்லாத மனம் எளிய மனம். அனுபவங்கள் கூடிவிட்டாலோ அது சிக்கல் நிறைந்ததாகி விடுகிறது. அத்தகைய மனம் மாசற்ற பேரின்பத்தை ஒரு போதும் அறிவதில்லை.

காதல் வயப்பட்டவர் நினைக்கிறார் தன்னுடைய காதலி இல்லாமல் உற்சாகத்தை இழக்க நேரிடும், மன ஊக்கத்தை இழந்து தனிமையில் வாடும்படி ஆகுமென்று. உண்மையில் காதல் கொள்வதற்கு முன்பே அவையெல்லாம் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர் அனுபவித்திருக்கிறார். காதல், அது உங்கள் மன வெறுமையைத் தற்காலியமாய் மூடி மறைக்க உதவிகிறது. ஒரு நபரின் மூலம் தனிமையில் இருந்து நீங்கள் தப்பிக்கிறீர்கள். உங்கள் செயலை மூடி மறைக்க அந்த நபரைப் பயன்படுத்துகிறீர்கள். உங்களுடைய பிரச்சனை இந்தப் தொடர்பு பற்றியதல்ல. உங்களது மன வெறுமையை பற்றியது. தப்புதல் என்பது ஆபத்தானது. காரணம் உங்ளுக்குள் அன்பு இல்லை. அது வெளியில் இருந்து வந்து உங்களை நிரப்பும் என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அன்பற்ற நிலைதான் உங்களைத் தனிமைத் துயரிலாழ்த்தி விரிகிறது.

பெற்றோர்களிடம் அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையில் நாம் பத்திரமாய் உணர்வோம். நம்முடைய சிந்திக்கிற முறையில், வாழும் முறையில், விசயங்களை ஆராந்து பார்க்கும் விததில் திருப்தி அடைவோம்.

உங்களுடைய குருவும், பெற்றோர்களும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்கும்படி உங்களைப் பழக்கியிருக்கிறார்கள். இப்படி நடந்து கொள்ள வேண்டும் இன்னின்ன நம்பிக்கைகளை வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருகீற்கள். பிரச்சினை பற்றி சுயமாகச் சிந்திகவும், வாழ்க்கையின் கோருதல் எதிர்கொள்ளவும் அஞ்சுகிறீர்கள். அந்தப் பயத்தில் அபத்தமாய், அலங்கோலமாய் எதையாவது செய்து வைப்பீர்கள்.

அடுத்தவரை சார்ந்திராத போது தனித்துவிடப்பட்டதாய் உணர்வீர்கள், சார்ந்து இருக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது. எங்கே அச்சம்ம் இருக்கிறதோ அங்கே அன்பு இருக்காது. உங்களிடம் அன்பு இருந்தால் நீங்கள் தனித்திருப்பதிலை.

யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, February 06, 2007

திருமூலர் திருமந்திரம் - தியானம்

பிறவிப் பயன்


நயனம் இரண்டு நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர்அற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயன்இது காயம் பயம்இல்லை தானே.



நயனம் - கண். இரண்டு கண்களையும் மூக்கின் நுனியில் பொருத்திப் பார்த்து; உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கி - உயருகின்ற, தாழ்வடையாத பிராணக் காற்றை உள்ளே அடக்கி; துயர்அற நாடியே - துன்பம் தருவதாகிய மனமயக்கங்களை நீக்கித் தியான நிலை பெற, தூங்க வல்லார்க்கு - உணர்வொன்றித் தூக்க நிலையில் யோக நித்திரையில் நிலைப்பவர்க்கு; பயன் இல்லைதானே - அப்படிப் பட்டவர்களுக்குப் பிறவித் துயரும் மரண பயமும் இல்லையாகும். காயம் - உடம்பு.


உள்ளத்துள் ஒளி உதயம்


இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடும் ஆகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம் அதாமே.


மனித மனம் இந்த உலக இச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. அவற்றை அடைய ஏங்கி இளைக்கிறது. எனவே இருட்டறையாக நெஞ்சு உவமிக்கப்பட்டது. உள்ளே - இந்த மனம் இருக்கிற உடன்புக்கு உள்ளே உருவாகிய; மூன்று மண்டலங்களிலும் (அக்கினி,சூரிய, சந்திர) சிந்தை கலந்து இருக்க, துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில் - உச்சித் துளை வழியாகப் பரம்பொருள் சிந்தனையாகிய பற்று வளர முயற்சி தொடந்து மேற்கொள்ளப்படுமானால்; 'இளைப்பின்றி மார்கழி ஏற்றமதாமே' - தடையின்றி, குறைவின்றி, சித்தாகாசத்தில் சிவசோதி தரிசனம் தானே கிட்டும். துளை - கப்பல உச்சி. துருவிடல் -துருவுதல், ஆராய்தல். இளைத்தல் - தடைப்படுதல், சோர்தல் - துயருறுதல். மார்கழி - உதய காலம். ஏற்றம் - பெருமை.

திருமூலர் திருமந்திரம் - ஒழுக்கம்

'நான்' எனும் அகந்தை தானொழிய வேண்டும்


தானே விடும்பற்(று) இரண்டு தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர் ஆகுதிஅவி உண்ணவே.


தானாக விடுபட்டு விலகும் பற்றுகள் இரண்டு. ஒன்று அகப் பற்று. மற்றொன்று புறப்பற்று. இந்த இரண்டும், இறை உணர்வை மனதில் கொள்ள (தரித்திட)த் தாமாகவே விலகிப் போகும் (தானே விடும்). 'நான்' என்னும் ஆணவம் விடுபட, மற்ற அகங்காரங்கள் எல்லாம் பட்டு விடும் - கெட்டழியும். பிறகு உள்ளம் வேறொன்றையும் அடைய விரும்பாது. பூமேவு நான்முகனும் - தாமரைப் பூவிலிருக்கும் நான்முகனாகிய பிரமன், புண்ணிய மூர்த்தியாய் விளங்குவது, ஓமேவும் - ஓமத்தீயிலே இடப்படும், ஓர் ஆகுதி - அவியை, உண்ணவே - உண்ணுவதற்காகவே.


கண்ணாடி போலக் கடவுளைக் காணலாம்


எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.


எண்ணாயிரம் ஆண்டுக் காலம் தவயோகம் புரிந்தாலும், கண் போன்றவனை, உண்ணத் தெவிட்டாத அமுதினைப் போன்றவனைக் கண்கொண்டு கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், உள்நாடி உள்ளே - சுழுமுனை நாடி உள்ளே ஒளிவடிவாக இருப்பவனை, அகக்கண் கொண்டு பார்த்தால், அப்பரம் பொருள்; கண்ணாடி போல - கண்ணாடியில் காண்பதைப் போல, கண்ணாடி ஒளிபோல, கலந்து நின்றானே - கண்ணுக்குள் காணக் கலந்து நிற்பான்.