Saturday, February 05, 2011

உறவு என்பது...

அசோகமித்திரன் ‘விடுதலை’ குருநாவலில் இருந்து என்னை அதிகம் சிந்திக்க வைத்த வரிகள்....

வாழ்க்கை என்பது அனுவம். அனுபவம் என்பது தன்னை வேறு ஒன்றுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வது. யாரும் தனியே பிரித்து வாழ முடியாது. ஆதலால் வாழ்க்கை என்பது சம்பந்தப்படுத்திக் கொள்வது. சம்பந்தப்படுத்திக் கொள்வதென்பது செயலில் ஈடுபடுவது. வாழ்க்கையாகிய உறவைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை ஒருவர் எப்படிப் பெற முடியும்? சம்பந்தப்படுத்திக் கொள்வது என்பது மனிதர்களோடு மட்டுந்தானா அல்லது வேறு பொருள்களும் கருத்துக்களும் இதில் சேர்த்தியா? வாழ்க்கையே விஷயங்களோடு நம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்வது - இதில் மற்றவர்கள், பொருள்கள், அபிப்பிராயங்கள் எல்லம் சேந்ததுதான், இந்த ‘சம்பந்தப்படுத்திக் கொள்வது’ என்பதைப் புரிந்துகொள்வதில்தான், நாம் வழ்க்கையைப் பூரணமாகவும் சரியாகவும் எதிர்த்து நிற்கக் கூடிய பக்குவத்தைப் பெறுகிறோம். நம் பிரச்சனை உறவை புரிந்துகொள்வது. அது நமக்கு அனுசரிப்பும் விழிப்பும் பொருத்தமான செயல்களில் உடனுக்குடனே உந்தவைக்கும் குணமும் ஏற்படுத்தும்.

நம் வாழ்க்கையைச் சிறிது பரிசோதித்துப் பார்த்தாலும், நாம் மற்றவர்களிடம் கொள்ளும் உறவு முறைகளைத் துளியேனும் கூர்ந்து பார்த்தாலும், எப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர் எதிரிடையாக இருந்து வருகிறோம் என்று தெரியும். உண்மையில் நமக்கு யாரைப் பற்றியும் அக்கறையில்லை. நாம் அதுபற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எவரைப் பற்றியும் அக்கறையும் கிடையாது. நமக்கு அனுகூலமாயிருக்கும் வரை நமக்கு ஓர் அடைக்கலமயிருக்கும் வரை நமக்குத் திருப்தியளிக்கும் வரைதான் நாம் ஒருவரோடு உறவு கொள்கிறோம்.. ஆனால் அதில் சௌகரியம் இல்லை, பயம் இல்லை என்றால் மறுகணம் அந்த உறவை அப்படியே நழுவவிட்டு விடுகிறோம். அதாவது உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரைதான். இதைக் கேட்கும்போது கொடூரமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் கூர்ந்து பரிசோதித்தால் நான் சொல்வது உண்மைதான் என்று விளங்கும். இந்த உண்மையைப் புறக்கணித்திருப்பது அறியாமையில் விழுந்திருப்பதாகும். அறியாமை சரியான உறவை உண்டுபண்ண முடியாது...

உறவு சுய உணர்வூட்டக் கூடியது. தன்னை அறிந்து கொள்ளாமல் தன் மனத்தின், நெஞ்சத்தின் வழிகளைக் கண்டுகொள்ளாமல், வெளிப்படையாக உலகத்தை ஒழுங்குப்படுத்த முயலுவது அர்த்தமற்றது. தான் மற்றொருவரிடம் கொள்ளும் உறவு முறையைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். அப்பொது உள்புதைந்திருக்கும் தந்திரங்கள், குரோதங்கள், அபிலாஷைகள் இவைகளைக் கண்டுகொள்ள முடியும். எப்பொது அவைகளைக் கண்டு கொள்ளுதல் ஆரம்பமாகிறதோ அப்பொதே உங்களுக்குப் புதுவாழ்வு தொடங்குகிறது. அதுதான் விமோசனத்தின், விடுதலையின் முதல் அறிகுறி.

----



                 “உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரைதான்”. 
   

No comments: