Sunday, March 07, 2010

"சாஸ்வதச் சுழற்சித் தத்துவம்"


“நீச்சே சொன்னார்...” நம்புதிரி தொடர்ந்தார். “பொருள் அல்லது ஜடம் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளது. காலமோ முடிவேயில்லாதது. பிரபஞ்சத்தில் உள்ள ஜடம் எவ்வளவு பிரம்மாண்டமான அளவு கொண்டதாய் இருந்தாலும் காலப் பெருவளியின் முன் அதை வைத்தால் மிக அற்பமானது தான் அது.” நம்பூதிரி கையை வீசிக்காட்டிப் பேசினார். “இந்த அறை, மேஜை, புஸ்தகங்கள், நீங்கள், நான், நம் குரல், நம் மொழி வார்த்தைகள், அவற்றின் அர்த்தம் - அனைத்துமே ஜடத்துள் அடங்கிய பல்வேறு எண்ணிலடங்காத கூறுகள் பரஸ்பரம் பின்னியும், இணைந்தும் உருவானவை தாம். பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாச் சம்பவங்களும் ஜடத்தில் ஏற்படும் அலைகள் தாம். எட்டு புறங்கள் கொண்ட கியூபுக்கே பல லட்சம் காம்பினேஷன்கள் உண்டு. பற்பல கோடி காம்பினேஷன்கள் இருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியாத அளவு...”

நம்பூதிரி என்னை உற்றுப் பார்த்தார். “ஆனால் ஜடத்துக்கு எல்லையுண்டு. எனவே அதன் பற்பல துணுக்குகளின் இணைப்புகளினால் ஏற்படும் சம்பவங்களுக்கும் எல்லை உண்டு. காம்பினேஷன்கள் அனந்தகோடி இருக்கலாம். ஆனால் அவை ஒரு நால் நிச்சியம் தீர்ந்து போகும். பிறகு?”

“அய்யோ!” என்றான் பரமு பயத்துடன்.

நம்பூதிரி அவனை அசட்டை செய்து, “பிறகு?” என்றார். “காலத்துக்கு முடிவேயில்லை. அப்போது என்ன ஆகும்? ஒரு முறை நிகழ்ந்த காம்பினேஷன்கள் மீண்டும் நிகழும்; நிகழ்ந்தே ஆகவேண்டும்; இல்லையா? ஜடத்தில் ஏற்ப்படும் பலகோடி காம்பினேஷன்களின் விளைவாய் அப்பன் நம்பூதிரி ஜெயமோகனிடம் பேசும் இந்தச் சம்பவம் நிகழ்கிறது. அப்படியானால் இதே சம்பவம் இப்படியே மீண்டும் நிகழ்ந்தாக வேண்டும். இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்க வேண்டும். இது காலத்தின் முடிவற்ற ஓட்டத்தில் தொடர்ந்து நிகந்தபடியே இருக்கும். இதுதான் எட்டர்னல் ரிகரன்ஸ் தியிரி. சாஸ்வதச் சுழற்சித் தத்துவம். ரொம்ப சிம்பிள்...”

.
.
.
.

“இதெல்லாம் தப்பு” என்றேன்.

“என்னது?” என்றார் ஆவேசமாய்.

“இந்தத் தத்துவம் தப்பு” என்றேன் அழுத்தமாய்.

.
.,
.
.
“தப்பு என்றால்...? என்ன தப்பு? அதைச் சொல்லு.”

“ஜடம் ஒரு அளவுக்கு உட்பட்டது என்றீர்கள். அப்படியில்லை. ஜடமும் காலம் போலவே அளவற்றதுதான்.”

“என்ன உளறுகிறாய்?”

“உங்களுக்கு ஐன்ஸ்டீனைத் தெரியுமா?”

“கேள்விப்பட்டேன்.”

“E = mc2 என்றால் என்ன தெரியுமா? ஜடமும் சக்தியும் ஒன்றுதான் என்ற தத்துவம் அது. ஜடத்தை ஒளியின் வேகத்தின் இரட்டையால் பெருக்கினால் சக்தியின் அளவு கிடைத்துவிடும்.”

நம்பூதிரி பீதி வசப்பட்டு, “அதெப்படி?”. என்றார்.

“போய்ப் படியும். ஜடம் ஒஅளியின் வேகத்தில் நகர்ந்தால் சக்தி ஆகும். சக்தி ஜடமும் ஆகும். சக்திக்கு எல்லையே இல்லை. ஜடத்துக்கும் எல்லை இல்லை.”

“ஐன்ஸ்டீன் சொல்வது தப்பு.”

.
.
.

- ஜெயமோகன்
“ஜகன்மித்யை” சிறுகதையிலிருந்து.

No comments: