Wednesday, August 02, 2006

பெண் <=> சக்தி

"வெகுநாளைக்கு முன்பு மொழி நாகரீகம் வருவதற்கு முன்பு, உணவு நாகரீகம் வருவதற்கு முன்பு, உடைகளற்று மனிதர் திரிந்தபொழுது, வெட்கமின்றி விலங்குகளாக அலைந்தபொழுது பெண்தான் ஆளுமை செய்திருக்கிறாள்."

"எப்பொழுதெல்லாம் உயிர் வாழ்தல் கடினமாக இருக்கிறதோ, எப்பொழுதெல்லாம் உயிர் வாழ்தல் பற்றி மிகுந்த அக்கறை தேவைப்படுகிறதோ அப்பொழுது பெண்தான் முன்வந்து நிற்கிறாள். கடினமான விஷயங்களை அவளால்தான் தாங்க முடியும். வலி பொறுக்கவும், பதிலடி கொடுக்கவும் பெண்ணுக்கு இருக்கின்ற வேகம் ஆணுக்கு அப்போதும் இல்லை இப்போதும் இல்லை."

"ஆண் பெண் பேதங்கள் இது பற்றி யோசிக்கிறவர்களுக்கு இல்லாமல், இது ஒரு ஆராய்ச்சி என்று உட்கார்ந்து கொண்டால் உள்ளுக்குள்ளே சக்தி மிகுந்தவர் யார் என்பது நன்றாக புரிந்து போகும்."

"இயங்குவது சக்தி, இயக்கப்படுவது சிவம். இயக்குகிறதற்கு சக்தி என்று பெயர். சக்தி இயங்கி சிவத்தை நகர்த்தி சிவம் நகர சக்தி உருவாகிறது. நகரவைப்பதும் சக்தி - நகர்வதால் ஏற்படும் விளைவும் சக்தி. ஒரு கல் ஆண் - அதற்குள் அதை இறுக்க அந்தத் துகள்களை இறுக்கப்பிடித்து வைத்திருக்கும் சக்தி பெண்."

"அடக்கி வைத்தால் அழிந்து விடுமோ அல்லது சீறி எழுமோ என்று பயந்து அவளை போற்றியும் வைத்தார்கள். அடைக்கப்பட்ட சக்தியை போற்றி வழிபடுவதுதான் சாக்தம். அடங்காத சக்தி முன்பு எந்த வழிபாடும் எடுபடாது. வழிபட வேண்டிய அவசியமில்லை."

இது எல்லாம் "வெகுநாளைக்கு முன்பு மொழி நாகரீகம் வருவதற்கு முன்பு....."

No comments: