Tuesday, September 29, 2009

இயல்பு பிழை

இளம் காலை பொழுது
சூரியன் சுவடு அறியாத கானகம்
சுற்றிலும் ஒலுங்கில்லா அடர்ந்த மரங்களின் தோற்றம்
தன்னை கானகத்தில் முழுதாய் அர்ப்பனித்திருக்கும் புற்கள்
காய்ந்து போன சுவடு கானக்கிடைக்காத வனம்
பச்சை நிறம் படர்ந்து , பழகிக் களிக்கும் சூழல்
வசியம் செய்யும் ஈர மண் வாசனையை,
சுமந்தபடி வரும் இளந்தென்றல்
நேற்றைய மழையில் தோன்றிய
நாளைய மலர்களின் இளந்தளிர்கள்
சிறுக் குழிகளிடம் சிறை கொண்ட மழை நீர்
மிக சமீபத்தில் அருவியின் உயிரோசை

இவை அனைத்தையும் சுவாசித்தபடி,
துறவு பூண்ட மனதினை வெல்ல நினைக்கும் அறிவுடன்
ஒர் அற்ப ஜீவனாய் நான்.
குறிக்கோளின்றி பாதங்களை பதிவு செய்கிறேன்
இச்சூழலில் காணாமல் போன என்னை பறிசோதித்து
தோற்றது அருவியுன் சாறல்.
அனைந்து போன அறிவோடும்,
தூரம் சென்ற மனதோடும்,
உயிர் வலியை சுமந்த உடலாய் நான்.

என்னை நான் தொலைத்த அந்த கனநேரத்தில்....




என்ன அதிசயம் தூரத்தில் ’மார்கழிப் பூவே..’ பாடலின் துவக்க இசை கேட்கிறது.இப்பொழுது இன்னும் சத்தமாக. விழித்துப் பார்த்தேன். சந்தேகமே இல்லை இது கடமை தவறாத எனது கைப்பேசிதான். அய்யையோ விடிந்து விட்டது.அலுவலகத்துக்கு படையேடுக்க வேண்டும், செயற்கையாய் சிரிக்க வேண்டும், முடியாவிட்டாலும் நடிக்க வேண்டும், இன்னும் பல... அந்த சொற்ப நேரத்திலும் இறைவனை வேண்டுகிறேன் இக்கனவை நினைவாக்க அல்ல , நாளையும் இக்கனவு தொடர வேண்டும் என்று.


- யசோ.