Monday, February 26, 2007

தனித்து நி்ற்கும் துணிவு

அனுபவமில்லாத மனம் எளிய மனம். அனுபவங்கள் கூடிவிட்டாலோ அது சிக்கல் நிறைந்ததாகி விடுகிறது. அத்தகைய மனம் மாசற்ற பேரின்பத்தை ஒரு போதும் அறிவதில்லை.

காதல் வயப்பட்டவர் நினைக்கிறார் தன்னுடைய காதலி இல்லாமல் உற்சாகத்தை இழக்க நேரிடும், மன ஊக்கத்தை இழந்து தனிமையில் வாடும்படி ஆகுமென்று. உண்மையில் காதல் கொள்வதற்கு முன்பே அவையெல்லாம் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர் அனுபவித்திருக்கிறார். காதல், அது உங்கள் மன வெறுமையைத் தற்காலியமாய் மூடி மறைக்க உதவிகிறது. ஒரு நபரின் மூலம் தனிமையில் இருந்து நீங்கள் தப்பிக்கிறீர்கள். உங்கள் செயலை மூடி மறைக்க அந்த நபரைப் பயன்படுத்துகிறீர்கள். உங்களுடைய பிரச்சனை இந்தப் தொடர்பு பற்றியதல்ல. உங்களது மன வெறுமையை பற்றியது. தப்புதல் என்பது ஆபத்தானது. காரணம் உங்ளுக்குள் அன்பு இல்லை. அது வெளியில் இருந்து வந்து உங்களை நிரப்பும் என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அன்பற்ற நிலைதான் உங்களைத் தனிமைத் துயரிலாழ்த்தி விரிகிறது.

பெற்றோர்களிடம் அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையில் நாம் பத்திரமாய் உணர்வோம். நம்முடைய சிந்திக்கிற முறையில், வாழும் முறையில், விசயங்களை ஆராந்து பார்க்கும் விததில் திருப்தி அடைவோம்.

உங்களுடைய குருவும், பெற்றோர்களும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்கும்படி உங்களைப் பழக்கியிருக்கிறார்கள். இப்படி நடந்து கொள்ள வேண்டும் இன்னின்ன நம்பிக்கைகளை வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருகீற்கள். பிரச்சினை பற்றி சுயமாகச் சிந்திகவும், வாழ்க்கையின் கோருதல் எதிர்கொள்ளவும் அஞ்சுகிறீர்கள். அந்தப் பயத்தில் அபத்தமாய், அலங்கோலமாய் எதையாவது செய்து வைப்பீர்கள்.

அடுத்தவரை சார்ந்திராத போது தனித்துவிடப்பட்டதாய் உணர்வீர்கள், சார்ந்து இருக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது. எங்கே அச்சம்ம் இருக்கிறதோ அங்கே அன்பு இருக்காது. உங்களிடம் அன்பு இருந்தால் நீங்கள் தனித்திருப்பதிலை.

யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, February 06, 2007

திருமூலர் திருமந்திரம் - தியானம்

பிறவிப் பயன்


நயனம் இரண்டு நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர்அற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயன்இது காயம் பயம்இல்லை தானே.



நயனம் - கண். இரண்டு கண்களையும் மூக்கின் நுனியில் பொருத்திப் பார்த்து; உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கி - உயருகின்ற, தாழ்வடையாத பிராணக் காற்றை உள்ளே அடக்கி; துயர்அற நாடியே - துன்பம் தருவதாகிய மனமயக்கங்களை நீக்கித் தியான நிலை பெற, தூங்க வல்லார்க்கு - உணர்வொன்றித் தூக்க நிலையில் யோக நித்திரையில் நிலைப்பவர்க்கு; பயன் இல்லைதானே - அப்படிப் பட்டவர்களுக்குப் பிறவித் துயரும் மரண பயமும் இல்லையாகும். காயம் - உடம்பு.


உள்ளத்துள் ஒளி உதயம்


இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடும் ஆகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம் அதாமே.


மனித மனம் இந்த உலக இச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. அவற்றை அடைய ஏங்கி இளைக்கிறது. எனவே இருட்டறையாக நெஞ்சு உவமிக்கப்பட்டது. உள்ளே - இந்த மனம் இருக்கிற உடன்புக்கு உள்ளே உருவாகிய; மூன்று மண்டலங்களிலும் (அக்கினி,சூரிய, சந்திர) சிந்தை கலந்து இருக்க, துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில் - உச்சித் துளை வழியாகப் பரம்பொருள் சிந்தனையாகிய பற்று வளர முயற்சி தொடந்து மேற்கொள்ளப்படுமானால்; 'இளைப்பின்றி மார்கழி ஏற்றமதாமே' - தடையின்றி, குறைவின்றி, சித்தாகாசத்தில் சிவசோதி தரிசனம் தானே கிட்டும். துளை - கப்பல உச்சி. துருவிடல் -துருவுதல், ஆராய்தல். இளைத்தல் - தடைப்படுதல், சோர்தல் - துயருறுதல். மார்கழி - உதய காலம். ஏற்றம் - பெருமை.

திருமூலர் திருமந்திரம் - ஒழுக்கம்

'நான்' எனும் அகந்தை தானொழிய வேண்டும்


தானே விடும்பற்(று) இரண்டு தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர் ஆகுதிஅவி உண்ணவே.


தானாக விடுபட்டு விலகும் பற்றுகள் இரண்டு. ஒன்று அகப் பற்று. மற்றொன்று புறப்பற்று. இந்த இரண்டும், இறை உணர்வை மனதில் கொள்ள (தரித்திட)த் தாமாகவே விலகிப் போகும் (தானே விடும்). 'நான்' என்னும் ஆணவம் விடுபட, மற்ற அகங்காரங்கள் எல்லாம் பட்டு விடும் - கெட்டழியும். பிறகு உள்ளம் வேறொன்றையும் அடைய விரும்பாது. பூமேவு நான்முகனும் - தாமரைப் பூவிலிருக்கும் நான்முகனாகிய பிரமன், புண்ணிய மூர்த்தியாய் விளங்குவது, ஓமேவும் - ஓமத்தீயிலே இடப்படும், ஓர் ஆகுதி - அவியை, உண்ணவே - உண்ணுவதற்காகவே.


கண்ணாடி போலக் கடவுளைக் காணலாம்


எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.


எண்ணாயிரம் ஆண்டுக் காலம் தவயோகம் புரிந்தாலும், கண் போன்றவனை, உண்ணத் தெவிட்டாத அமுதினைப் போன்றவனைக் கண்கொண்டு கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், உள்நாடி உள்ளே - சுழுமுனை நாடி உள்ளே ஒளிவடிவாக இருப்பவனை, அகக்கண் கொண்டு பார்த்தால், அப்பரம் பொருள்; கண்ணாடி போல - கண்ணாடியில் காண்பதைப் போல, கண்ணாடி ஒளிபோல, கலந்து நின்றானே - கண்ணுக்குள் காணக் கலந்து நிற்பான்.