Thursday, September 28, 2006

கவித்துளிகள்..

வேதனை......

கொதியாய் கொதிக்குது இதயம்
விதியின் சதியில் மாட்டியதால்
நித்தம் நித்தம் பல கனவு
முத்தம் தருமா ஒரு வசந்தம்

உலவறிந்த பின் உலகை வெறுத்தேன்
பாவம் என்ற கல்லறைக்குள் பலியானேன்
விதி செல்லும் வேகம் தடுக்கஒரு
கருவியை எங்கெங்கே தேட....?

நீண்டதோர் பயணம் கொள்ளபாதை
முழுவதும் முற்களின் கோலங்கள்.
துடிப்புக்கு புரியவில்லை தினம் தினம் ஏக்கங்கள்
நடிப்பக்கு புரியவில்லை நம்பிக்கையின் உருவங்கள்
பகலில் சிரித்து இரவில் விழியோடு...
செல்லும் நீர்தலையனையை குழிப்பாட்ட
தேடல் கொண்டு தேடேன்
இனி தொலைந்து போன வசந்தத்தை.


சுமை

எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்

1 comment:

சுஜா செல்லப்பன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...இன்னும் நிறைய எழுதுங்கள்..பாராட்டுக்கள் ராஹினி..